search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொடுமுடி அருகே தொழிலாளியை வெட்டி கொன்ற கள்ளக்காதலி
    X

    கொடுமுடி அருகே தொழிலாளியை வெட்டி கொன்ற கள்ளக்காதலி

    கொடுமுடி அருகே தொழிலாளியை வெட்டி கொன்ற கள்ளக்காதலியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த வாழ நாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45) தொழிலாளி.

    சிவக்குமார் ஒரு அரசியல் கட்சியின் மாநில இளைஞர் அணி இணைச் செயலாளராகவும் உள்ளார். இவரது மனைவி பூங்கொடி (40). இவர்களுக்கு நவீன், சூர்யா என 2 மகன்கள், காயத்ரி என்ற ஒரு மகளும் உள்ளனர்.

    கருத்து வேறுபாடு காரணமாக பூங்கொடி கணவர் சிவக்குமாரை பிரிந்து தனது மகன்கள் மகளுடன் பாசூரில் தனியாக வசித்து வருகிறார். சிவகுமார் வாழை நாயக்கன் பாளையம் பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை வடக்கு புதுப்பாளையம் சுடுகாடு கேட் அருகே உள்ள ஒரு புதரில் சிவக்குமார் தலையில் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்தார்.

    பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர்கள் இதனை பார்த்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிவகுமார் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சிவக்குமார் பரிதாபமாக இறந்தார்.

    சம்பவ இடத்திற்கு பெருந்துறை டிஎஸ்பி ராஜகுமார் வந்து விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் வீரா வர வழைக்கப்பட்டது.

    கொலையுண்ட சிவகுமாருக்கு பெண்களுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. எனவே கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். பெருந்துறை டிஎஸ்பி ராஜகுமார உத்தரவின் பெயரில் கொடுமுடி இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மலையம் பாளையம் இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் சிவகுமாரின் கள்ளக்காதலி ஒருவரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அந்த கள்ளக்காதலி கொடுமுடி அருகே காசி பாளையத்தில் வசித்து வருகிறார். இவர் எழுமாத்தூரில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து வருகிறார். கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து கடந்த 7 வருடமாக தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும் சிவக்குமாருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதேபோன்று மொடக்குறிச்சி சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் சிவகுமாருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. அவருடன் சிவகுமார் கொடுமுடி அடுத்த ஒத்தக்கடை பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

    சிவகுமார் பெண்களுடன் நெருக்கமாக பழகி அவர்களிடம் செலவுக்கு பணம் வாங்கி வந்ததாக கூறப்படுகிறது.

    கொலை நடந்த இரவு முதல் கள்ளக்காதலி தனது செல்போன் எண்ணை சுவிட்ச் ஆப் செய்து விட்டார். அந்த பெண் தான் சில பேருடன் சேர்ந்து சிவகுமாரை வெட்டி கொலை செய்துள்ளது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×