search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேன்கனிக்கோட்டை அருகே வனப்பகுதிக்கு தீ வைத்த 2 பேர் கைது
    X

    தேன்கனிக்கோட்டை அருகே வனப்பகுதிக்கு தீ வைத்த 2 பேர் கைது

    தேன்கனிக்கோட்டை அருகே அய்யூர் வனப்பகுதியில் தீ வைத்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    தேன்கனிககோட்டை:

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அய்யூர் வனப்பகுதியில் நேற்று தேன்கனிக்கோட்டை வனசரகர் வெங்கடாசலம் மற்றும் வனவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இந்த தீ அருகில் இருந்த காய்ந்த செடிகள், மரம் போன்றவற்றில் பரவ தொடங்கியது.

    உடனே வனத்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வனத்துறையினர் வருவதை கண்டு மர்ம நபர்கள் 2 பேர் தப்பி ஓடினர். அவர்களை உடனே வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பெட்டமுகிலாளம் அருகே பெல்லட்டி பகுதியைச் சேர்ந்த மாதையன் மகன் பசவராஜ் (வயது 39), கிரியப்பா மகன் சிம்மன் (45) ஆகிய 2 பேரும் வனப்பகுதிக்கு தீவைத்தது தெரியவந்தது. அவர்களை உடனே கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஓசூர் கிளை சிறையில் அடைத்தனர்.
    Next Story
    ×