search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டிப்பட்டி அருகே திருமண ஆசை காட்டி பெண் பலாத்காரம்- வாலிபர் கைது
    X

    ஆண்டிப்பட்டி அருகே திருமண ஆசை காட்டி பெண் பலாத்காரம்- வாலிபர் கைது

    ஆண்டிப்பட்டி அருகே திருமண ஆசை காட்டி பெண்ணை பலாத்காரம் செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே வரு‌ஷநாடு அம்பேத்கார் நகரைச் சேர்ந்தவர் பாண்டி மகன் ராமராஜ் (வயது 23). இவருக்கும் பிள்ளைமுகம்பட்டியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது.

    அந்த பெண்ணின் தந்தை இறந்து விட்டார். தாய் மறுமணம் செய்து கொண்டதால் அந்த பெண் தனது தாத்தாவின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொள்வதற்காக பூ வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ராமராஜ் இளம்பெண்ணை பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    அப்போது அவரிடம் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து பல முறை உல்லாசமாக இருந்துள்ளார். அதன் பின்னர் ராமராஜ் இளம் பெண்ணை திருமணம் செய்ய மறுத்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் இது குறித்து ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து ராமராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×