search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவெறும்பூர் அருகே குடிபோதையில் பாலத்தில் இருந்து விழுந்து ராணுவ வீரர் பலி
    X

    திருவெறும்பூர் அருகே குடிபோதையில் பாலத்தில் இருந்து விழுந்து ராணுவ வீரர் பலி

    திருவெறும்பூர் அருகே குடிபோதையில் பாலத்தில் இருந்து தவறி விழுந்து ராணுவ வீரர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருவெறும்பூர்:

    திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகரை சேர்ந்தவர் கருப்பையா (வயது 50). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி பாக்கியலட்சுமி. இவர்களுக்கு ராஜேஷ் கண்ணன், ராகுல்கிரண் என்ற 2 மகன்கள் உள்ளனர். கருப்பையாவுக்கு  குடிப்பழக்கம் உண்டு.

    இந்நிலையில் நேற்று மாலையில் கருப்பையா நவல்பட்டு சிலோன் காலனி பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் மது வாங்கி, அந்த பகுதியில் உள்ள கட்டளை வாய்க்கால் பாலத்தில் மீது அமர்ந்து மது குடித்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் போதையில் பாலத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கருப்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் யாரும் பார்க்கவில்லை.

    இந்நிலையில் இன்று காலை அந்த வழியே நடந்து சென்றவர்கள் கருப்பையா இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கருப்பையாவின் உடலை மீட்டு பிரேத பரி சோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    இது குறித்து நவல்பட்டு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
    Next Story
    ×