search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பத்தூரில் பஸ்சில் இளம் பெண்ணிடம் நகை திருட்டு
    X

    திருப்பத்தூரில் பஸ்சில் இளம் பெண்ணிடம் நகை திருட்டு

    திருப்பத்தூரில் பஸ்சில் பயணம் செய்த இளம்பெண்ணிடம் நகை, பணம் திருட்டு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    திருப்பத்தூர்:

    ஒசூரை சேர்ந்தவர் குமார் (வயது 42). தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சமியா (38). இவர்களுக்கு 1 மகன் 1 மகள் உள்ளனர். இவர்கள் இருவரும் நாட்டறம்பள்ளியில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் கல்லூரியில் படிக்கும் பிள்ளைகளின் படிப்பு செலவிற்காக குமார் தனது மனைவியுடன் ரூ.80 ஆயிரம் பணம் மற்றும் 7 பவுன் நகையை ஒரு பையில் எடுத்து கொண்டு இன்று காலை திருப்பத்தூருக்கு பஸ்சில் பயணம் செய்து வந்தார்.

    பண பையை சமியா வைத்திருந்து உள்ளார். திருப்பத்தூர் பஸ் நிலையம் அருகே வந்த போது சமியா வைத்திருந்த பண பை காணாமல் போயிருந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தம்பதி கத்திகூச்சலிட்டனர். பின்னர் இது குறித்து திருப்பத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×