search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போரூர் அருகே தனியார் கார் பார்க்கிங்கில் திடீர் தீ - 200க்கு மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்
    X

    போரூர் அருகே தனியார் கார் பார்க்கிங்கில் திடீர் தீ - 200க்கு மேற்பட்ட கார்கள் எரிந்து நாசம்

    சென்னை, போரூர் அருகே அமைந்துள்ள தனியார் கார் பார்க்கிங்கில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 200க்கு மேற்பட்ட கார்கள் எரிந்து நாசமாகின. #PorurCallTaxiFire
    சென்னை:

    சென்னை, போரூர் அருகே தனியார் வாடகை கார்கள் நிறுத்துமிடத்தில் இன்று மதியம் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டள்ளது. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் மளமளவென தீ பிடித்தது. 

    தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கார்களில் பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடினர். 



    கார்களில் பிடித்த தீ காரணமாக அப்பகுதியில் ஏற்பட்ட புகையால், அங்குள்ள தனியார் மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். இந்த தீவிபத்தில் சுமார் 214 கார்கள் எரிந்து நாசமாகின.

    ஏற்கனவே, பெங்களூருவில் நேற்று நடைபெற்ற விமான கண்காட்சி கார் பார்க்கிங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் 300 கார்கள் தீயில் எரிந்து நாசமானது குறிப்பிடத்தக்கது. #PorurCallTaxiFire
    Next Story
    ×