search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திடீர் மயக்கம் - மருத்துவமனையில் முதல்வர் நலம் விசாரித்தார்
    X

    அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திடீர் மயக்கம் - மருத்துவமனையில் முதல்வர் நலம் விசாரித்தார்

    சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் திடீரென மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. #UdumalaiRadhakrishnan
    சென்னை:

    சென்னையில் தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று கலந்து கொண்டார். அப்போது திடீரென அவர் மயக்கம் அடைந்தார்.

    இதையடுத்து, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆம்புலன்ஸ் மூலம் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.



    அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை முதல்வர் பழனிசாமி சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் விஜயபாஸ்கர் உள்பட பலர் சந்தித்து நலம் விசாரித்தனர். #UdumalaiRadhakrishnan
    Next Story
    ×