என் மலர்
செய்திகள்

ஈரோட்டில் மொபட் மீது கார் மோதி முதியவர் பலி
ஈரோட்டில் மொபட் மீது கார் மோதிய விபத்தில் முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு, வேப்பம்பாளையத்தை சேர்ந்தவர் நல்லமுத்து (வயது60). ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.
நல்லமுத்து நேற்று இரவு தனது மொபட்டியில் பெருந்துறை ரோடு, புதுகாலனி பிரிவு அருகே வந்து கொண்டிருந்தார். பின்னர் சாலையை கடக்க முயன்ற போது எதிரே வந்த கார் ஒன்று எதிர்பாராத வகையில் நல்லசாமி ஓட்டி வந்த மொபட் மீது மோதியது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நல்லமுத்துவை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நல்லமுத்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு, வேப்பம்பாளையத்தை சேர்ந்தவர் நல்லமுத்து (வயது60). ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.
நல்லமுத்து நேற்று இரவு தனது மொபட்டியில் பெருந்துறை ரோடு, புதுகாலனி பிரிவு அருகே வந்து கொண்டிருந்தார். பின்னர் சாலையை கடக்க முயன்ற போது எதிரே வந்த கார் ஒன்று எதிர்பாராத வகையில் நல்லசாமி ஓட்டி வந்த மொபட் மீது மோதியது.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நல்லமுத்துவை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நல்லமுத்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.
இது குறித்து தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story