search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரையில் திருமண ஆசை காட்டி சிறுமி கடத்தல்
    X

    மதுரையில் திருமண ஆசை காட்டி சிறுமி கடத்தல்

    மதுரையில் திருமண ஆசை காட்டி சிறுமி கடத்தப்பட்டது குறித்து அவரது தாய் போலீசில் புகார் செய்தார். போலீசார் 2 பேரை தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை அண்ணாநகர் அருகேயுள்ள கரும்பாலையைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 22). இவர் சக்கிமங்கலம் அஞ்சுகம் நகரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியை காதலித்து வந்தார்.

    இதையடுத்து அவர் சிறுமியின் பெற்றோரிடம் பெண் கேட்டு வந்தார். ஆனாலும் அவர்கள் முத்துப்பாண்டிக்கு பெண் கொடுக்க மறுத்து விட்டனர்.

    இந்த நிலையில் முத்துப்பாண்டி சம்பவத்தன்று நள்ளிரவு சிறுமியின் வீட்டுக்குச் சென்றார். அங்கு சிறுமியின் தாய் மற்றும் சகோதரி ஆகியோர் இருந்தனர்.

    அப்போது முத்துப்பாண்டி சிறுமியிடம், நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம். என்னுடன் வா’ என்று அழைத்து உள்ளார். அதற்கு சிறுமிக்கு விருப்பம் இல்லை என்று கூறியதாக தெரிகிறது.

    இதையடுத்து முத்துப்பாண்டி வீட்டில் இருந்த தாய்-சகோதரியை அடித்து உதைத்து சிறுமியை கடத்திச் சென்று விட்டாராம்.

    இது தொடர்பாக சிறுமியின் தாய் ஊமச்சிக்குளம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரிட்டோ ஆரோக்கியராஜ் வழக்குப்பதிவு செய்து முத்துப்பாண்டி மற்றும் சிறுமியை தேடி வருகிறார்.

    Next Story
    ×