என் மலர்
செய்திகள்

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி இன்று பதவியேற்றார்
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி இன்று பதவியேற்றுக் கொண்டார். #Congress #KSAlagiri
சென்னை:
தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் மாற்றப்பட்டு, காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என காங்கிரஸ் தலைமை கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது.
மேலும், செயல் தலைவர்களாக வசந்த்குமார், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளார் என் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி இன்று பதவியேற்றுக் கொண்டார். முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.
இதேபோல், செயல் தலைவர்களாக நியமனம் செய்யப்பட்ட வசந்த்குமார், ஜெயக்குமார், விஷ்ணுபிரசாத், மயூரா ஜெயக்குமார் ஆகியோரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் சஞ்சய்தத், திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவன், குஷ்பு உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக காங்கிரஸ் தலைவர் மற்றும் செயல் தலைவர்களுக்கு நாம் முழு ஒத்துழைப்பை அளிப்போம் என மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்துள்ளார். #Congress #KSAlagiri
Next Story






