என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தந்தையுடன் தகராறு: எலக்ட்ரீசியன் தற்கொலை
Byமாலை மலர்8 Feb 2019 11:28 AM GMT (Updated: 8 Feb 2019 11:28 AM GMT)
சேலம் அருகே மதுக்குடிக்க பணம் தர மறுத்த தந்தையுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக எலக்ட்ரீசியன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்:
சேலம் திருவாக்கவுண்டனூர், மேத்தாநகரை சேர்ந்தவர் ராஜ சேகர். இவரது மகன் திருக்குமரன் (வயது 23). எலக்ட்ரீசியன்.
இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் மது குடிக்க பணம் கேட்டு அடிக்கடி பெற்றோரிடம் தகராறு செய்து வந்தார். வழக்கம்போல் நேற்று திருக்குமரன் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தந்தை ராஜசேகரிடம் தான் மேலும் மது குடிக்க வேண்டும் பணத்தை கொடுக்குமாறு கூறினார். அதற்கு அவர் தன்னிடம் பணம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்றார்.
இதனால் கோபம் அடைந்த திருக்குமரன் பணத்தை வீட்டில் ஒளித்து வைத்து விட்டு பணம் இல்லை என்கிறாயா? எனக்கூறி தகராறு செய்ததாக தெரிகிறது. இதில் விரக்தி அடைந்த திருக்குமரன் திடீரென விஷத்தை எடுத்து குடித்து விட்டார். உயிருக்கு போராடிய அவரை திருவாக்கவுண்டனூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இங்கு நேற்று இரவு திருக்குமரன் சிகிச்சை பலன்அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது தெரிய வந்தது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் திருவாக்கவுண்டனூர், மேத்தாநகரை சேர்ந்தவர் ராஜ சேகர். இவரது மகன் திருக்குமரன் (வயது 23). எலக்ட்ரீசியன்.
இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் மது குடிக்க பணம் கேட்டு அடிக்கடி பெற்றோரிடம் தகராறு செய்து வந்தார். வழக்கம்போல் நேற்று திருக்குமரன் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்து தந்தை ராஜசேகரிடம் தான் மேலும் மது குடிக்க வேண்டும் பணத்தை கொடுக்குமாறு கூறினார். அதற்கு அவர் தன்னிடம் பணம் எதுவும் இப்போதைக்கு இல்லை என்றார்.
இதனால் கோபம் அடைந்த திருக்குமரன் பணத்தை வீட்டில் ஒளித்து வைத்து விட்டு பணம் இல்லை என்கிறாயா? எனக்கூறி தகராறு செய்ததாக தெரிகிறது. இதில் விரக்தி அடைந்த திருக்குமரன் திடீரென விஷத்தை எடுத்து குடித்து விட்டார். உயிருக்கு போராடிய அவரை திருவாக்கவுண்டனூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இங்கு நேற்று இரவு திருக்குமரன் சிகிச்சை பலன்அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது தெரிய வந்தது. இந்த தற்கொலை சம்பவம் குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X