என் மலர்
செய்திகள்

உடன்குடியில் லாரி மோதி தொழிலாளி பலி- டிரைவர் கைது
உடன்குடி அருகே லாரி மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
உடன்குடி:
இது குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காயல்பட்டினத்தை சேர்ந்த லாரி டிரைவர் அகமது என்பவரை கைது செய்தனர்.
உடன்குடி அருகே உள்ள வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்தவர் மந்திரம் (வயது 37). இவர் ஸ்டவ் அடுப்பு பழுது நீக்கும் தொழிலாளியாக இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மணப்பாடு அமராபுரம் அருகே சென்ற போது எதிரே வந்த கண்டெய்னர் லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த மந்திரத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு மந்திரம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காயல்பட்டினத்தை சேர்ந்த லாரி டிரைவர் அகமது என்பவரை கைது செய்தனர்.
Next Story