search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயன்ற வாலிபர் கைது
    X

    போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயன்ற வாலிபர் கைது

    போலி பாஸ்போர்ட்டில் இலங்கை செல்ல முயன்ற வாலிபரை கைது செய்த பெருங்குடி போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் குடியேற்ற பிரிவு இன்ஸ்பெக்டராக இருப்பவர் விக்டர். நேற்று இவர் பணியில் இருந்தார். அப்போது கும்பகோணம் ஆடுதுறையை சேர்ந்த முகம்மதுரியாஸ் (வயது 26) என்பவரின் பாஸ்போர்ட் பரிசோதித்து பார்க்கப்பட்டது.

    விமான நிலைய அதிகாரிகளின் பரிசோதனையில் அது போலி பாஸ்போர்ட் என்பது தெரிய வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் விக்டர் இதுதொடர்பாக பெருங்குடி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் தினகரன் வழக்குப்பதிவு செய்து முகம்மது ரியாசை கைது செய்து விசாரித்தார்.

    விசாரணையில் முகம்மது ரியாஸ் கொழும்பில் உள்ள பூவரஞ்தோட்டை பகுதியை சேர்ந்தவர் என்பதும், கும்பகோணம் கருப்பூர் நேதாஜி நகரில் தற்காலிகமாக வசிப்பதும் தெரிய வந்தது.

    இலங்கையை சேர்ந்த முகம்மது ரியாஸ் எதற்காக கும்பகோணம் வந்து தங்கி உள்ளார்? தமிழகத்தில் இருந்து போலி பாஸ்போர்ட் மூலம் ஏன் இலங்கை செல்ல முயன்றார்? என்பது தொடர்பாக பெருங்குடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×