search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூரில் பைனான்சியர் வீட்டில் 10 பவுன் நகை, ரூ.4½ லட்சம் கொள்ளை
    X

    வேலூரில் பைனான்சியர் வீட்டில் 10 பவுன் நகை, ரூ.4½ லட்சம் கொள்ளை

    வேலூரில் பைனான்சியர் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.4½ லட்சம் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றன.
    வேலூர்:

    வேலூர் தென்னமரத் தெருவை சேர்ந்தவர் பன்னீர் (வயது 50). பைனான்சியர். ஊதுபத்தி ஏஜென்சி தொழில் செய்து வருகிறார்.

    நேற்று இரவு வீட்டை பூட்டி விட்டு உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனை தெரிந்து கொண்ட கொள்ளை கும்பல் கதவை உடைத்து அங்கு சென்று பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் ரூ.4½ லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    இன்று காலை வீடு திரும்பிய பன்னீர் கதவு உடைந்து கிடப்பதையும், பீரோ திறந்து கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகை, பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

    இதுகுறித்து வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும், கைரேகை நிபுணர்களை வரவழைத்து கைரேகை சேகரித்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    வேலூர் மாநகர பகுதியில் நடந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    Next Story
    ×