search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 100 பேர் சிறையில் அடைப்பு
    X

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 100 பேர் சிறையில் அடைப்பு

    சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 100 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். #Jactogeo
    சேலம்:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த 22-ந் தேதி முதல் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதையொட்டி சேலத்திலும் கடந்த 22-ந் தேதி முதல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள். சேலத்தில் கடந்த 25-ந் தேதி மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டு ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்தநிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். அதில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் 45 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் ஜே.எம்.1 கோர்ட் மாஜிஸ்திரேட் செந்தில்குமார் முன்பு 45 பேரையும் ஆஜர்படுத்தினர்.

    அவர்களை வருகிற 11-ந் தேதி வரை சேலம் மத்திய சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    நாமக்கல்லில் பூங்கா சாலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் கைது செய்யப்பட்ட 55 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தினர்.

    அவர் வருகிற 4-ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து சேலம் மத்திய சிறையில் அவர்கள் அடைக்கப்பட்டனர். ஏற்கனவே கடந்த 25-ந் தேதி நாமக்கல்லில் மறியலில் ஈடுபட்ட 72 பேர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #Jactogeo
    Next Story
    ×