என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெரம்பூரில் ஆங்கிலோ இந்திய வாலிபர் கொலை
பெரம்பூர்:
பெரம்பூர் பாக்சன் தெருவைச் சேர்ந்தவர் பிரைன் கிளார்க் (45). ஆங்கிலோ இந்தியர்.
இவருடைய தம்பி கேரி கிளார்க் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார். அவர் அனுப்பிய பணத்தில் வாழ்ந்து வந்தார்.
இன்று காலை பாக்சன் தெருவில் பிரைன் கிளார்க் தலை நசுங்கிய நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். யாரோ அவருடைய தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தது தெரிய வந்தது.
தகவல் அறிந்ததும், செம்பியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார். கொலை செய்தது யார்? என்பது குறித்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடைபெறுகிறது.
கொலைக்கான காரணம் என்ன? அவருக்கு யாருடன் பழக்கம்? என்பது குறித்து பிரைன் கிளார்க் குடியிருந்த பகுதியில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆஸ்திரேலியாவில் இருக்கும் இவருடைய தம்பிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் சென்னை திரும்புகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்