search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வத்தலக்குண்டுவில் ஓட்டலில் ரகளை செய்தவர் கைது
    X

    வத்தலக்குண்டுவில் ஓட்டலில் ரகளை செய்தவர் கைது

    வத்தலக்குண்டு ஓட்டலில் ரகளை செய்தவர் கைது செய்யப்பட்டார்.

    வத்தலக்குண்டு:

    வத்தலக்குண்டு டென்னீஸ் கிளப் சாலையில் உள்ள ஓட்டலுக்கு கட்டகாமன்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த மருதகாளி (வயது25), முனியப்பன் ஆகியோர் சாப்பிட சென்றுள்ளனர். மோட்டார் சைக்கிளை ஓட்டல் முன்பு நிறுத்தி உள்ளனர். உரிமையாளர் பிரவீன் வாகனத்தை ஓரமாக நிறுத்தும்படி கூறி உள்ளார். இதனால்அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் நடந்தது.

    இதில் ஆத்திரம் அடைந்த 2 பேரும் ஓட்டலில் ரகளை செய்து பின்பு தங்களுக்குள்ளேயே மோதிக்கொண்டனர். இதில் முனியப்பன் படுகாயம் அடைந்து வத்தலக்குண்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து வத்தலக்குண்டு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து மருதகாளியை கைது செய்தனர்.

    Next Story
    ×