என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கோவையில் இன்று காலை மனைவியை கொன்ற கணவர்
கோவை:
கோவை ஆவாரம் பாளையம் இளங்கோ நகர் 3-வது வீதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி(68). இவரது மனைவி செல்வி(60). இவர்களுக்கு பிரபாகரன்(34) என்ற மகனும் 2மகள்களும் உள்ளனர். மகள்கள் 2 பேருக்கும் திருமணம் ஆகி கணவர் வீட்டில் வசித்து வருகிறார்கள்.
சத்தியமூர்த்தி, செல்வி ஆகியோர் மகன் பிரபாகரனுடன் வசித்து வருகிறார்கள். இன்று காலை வீட்டில் இருந்த சத்தியமூர்த்தி, செல்வி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தி துண்டால் தனது மனைவி செல்வியின் கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.
இதுபற்றி தெரியவந்ததும் பீளமேடு இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் பாண்டியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கடந்த சில நாட்களாகவே செல்வியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு சத்தியமூர்த்தி தகராறு செய்தது தெரியவந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்