search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோலார்பேட்டை ரெயிலில் செல்போன் திருடிய வாலிபர் கைது
    X

    ஜோலார்பேட்டை ரெயிலில் செல்போன் திருடிய வாலிபர் கைது

    ஜோலார்பேட்டை ரெயிலில் செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

    ஜோலார்பேட்டை:

    ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா (வயது 25). வடமாநிலத்தை சேர்ந்தவர் ஸ்ரீவிஹோரா இவர்கள் இருவரும் சம்பவத்தன்று சென்னையில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

    காட்பாடி ஜோலார்பேட்டை இடையே ரெயில் சென்று கொண்டிருந்த போது இருவரது செல்போன்களும் காணாமல் போயிருந்தது இது குறித்து இருவரும் ஜோலார்பேட்டை ரெயில் வே போலீசில் புகார் அளித்தனர்.

    இந்நிலையில் ரெயிவே போலீசார் நேற்று மாலை 3 பிளாட்பாரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் வாணியம்பாடியை சேர்ந்த ஹர்‌ஷன் அஹமது என்பது தெரியவந்தது. மேலும் ரெயிலில் ராஜேஷ்கண்ணா, ஸ்ரீவிஹோரா ஆகியோரது செல்போன் திருடியதை ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×