search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அழைப்பிதழில் சகோதரர் பெயர் இல்லை- வி‌ஷம் குடித்து இளம்பெண் தற்கொலை
    X

    அழைப்பிதழில் சகோதரர் பெயர் இல்லை- வி‌ஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

    தேனி அருகே அழைப்பிதழில் தனது சகோதரர் பெயர் போடாததால் இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    தேனி:

    தேனி மாவட்டம் தேவாரம் சி.எஸ்.ஐ. சர்ச் தெருவை சேர்ந்தவர் கோபிநாத். இவரது மனைவி மீரா (வயது31). இவர்களது குழந்தைக்கு வருகிற 10-ந் தேதி காதணி விழா நடத்த உள்ளனர்.

    இதற்காக அழைப்பிதழ் அச்சடித்தனர். அதில் மீராவின் சகோதரர் பெயர் இடம்பெறவில்லை. இது குறித்து தனது கணவரிடம் மீரா கேட்டபோது அவரை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டி அவமதித்தார்.

    இதனால் மனமுடைந்த மீரா வி‌ஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உத்தமபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது தம்பி பிரான்சிஸ் கொடுத்த புகாரின் பேரில் தேவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×