search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாமல்லபுரத்தில் காவலாளி மர்ம மரணம்
    X

    மாமல்லபுரத்தில் காவலாளி மர்ம மரணம்

    மாமல்லபுரத்தில் காவலாளி மர்ம மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் சம்பத் (வயது 60). இவர் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் குடியிருப்பு பகுதி வளாகத்தில் தங்கி காவலாளியாக வேலை பாத்து வந்தார்.

    இந்த நிலையில் தங்கியிருந்த அறையில் சம்பத் இறந்து கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து சம்பத் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.

    சம்பத் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×