என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெயலலிதா மரணம்- ஆறுமுகசாமி ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜர்
Byமாலை மலர்21 Jan 2019 5:49 AM GMT (Updated: 21 Jan 2019 7:41 AM GMT)
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகி விளக்கம் அளித்தார். #MinisterVijayabaskar #JayaDeathProbe
சென்னை:
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது நடந்தது என்ன? ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு முன்னர் அவர் வகித்து வந்த போயஸ் கார்டனில் நடைபெற்றது என்ன? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
ஜெயலலிதாவின் மரணத்தில் நிலவும் இந்த கேள்விகளுக்கு விடை காணும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார். இதற்காக சென்னை எழிலகத்தில் உள்ள ஆணைய அலுவலகத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள், சசிகலாவின் உறவினர்கள், அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் உள்ளிட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 75 நாட்கள் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது சுகாதாரத்துறை அமைச்சர் என்ற முறையில் நீங்கள் அளித்த ஆலோசனைகள் என்ன? வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதா? என்பது போன்ற கேள்விகள் விஜயபாஸ்கரிடம் முன் வைக்கப்பட்டன. இதற்கு அவர் உரிய பதிலை அளித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விஜயபாஸ்கர் நேரில் ஆஜராக வலியுறுத்தி ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் 4 முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 3 முறையும் சம்மன் அனுப்பப்பட்டபோது அவர் ஆஜராகவில்லை. 4-வது முறையாக அனுப்பப்பட்ட சம்மனை ஏற்றுத்தான் அவர் ஆஜராகி இருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்தது. அதில் விஜயபாஸ்கர் தொடர்ச்சியாக ஆஜராகி வந்தார். இதன் காரணமாகவே அவர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகவில்லை என்று கூறப்பட்டது. #MinisterVijayabaskar #JayaDeathProbe
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது நடந்தது என்ன? ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு முன்னர் அவர் வகித்து வந்த போயஸ் கார்டனில் நடைபெற்றது என்ன? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.
ஜெயலலிதாவின் மரணத்தில் நிலவும் இந்த கேள்விகளுக்கு விடை காணும் வகையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார். இதற்காக சென்னை எழிலகத்தில் உள்ள ஆணைய அலுவலகத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள், சசிகலாவின் உறவினர்கள், அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர்கள் உள்ளிட்டோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். சுகாதாரத்துறை அமைச்சரான விஜயபாஸ்கரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதனை ஏற்று அவர் இன்று காலை 10.25 மணி அளவில் ஆணையத்தில் ஆஜரானார்.
அப்பல்லோ ஆஸ்பத்திரியில் 75 நாட்கள் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது சுகாதாரத்துறை அமைச்சர் என்ற முறையில் நீங்கள் அளித்த ஆலோசனைகள் என்ன? வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டதா? என்பது போன்ற கேள்விகள் விஜயபாஸ்கரிடம் முன் வைக்கப்பட்டன. இதற்கு அவர் உரிய பதிலை அளித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விஜயபாஸ்கர் நேரில் ஆஜராக வலியுறுத்தி ஆறுமுகசாமி ஆணையம் சார்பில் 4 முறை சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 3 முறையும் சம்மன் அனுப்பப்பட்டபோது அவர் ஆஜராகவில்லை. 4-வது முறையாக அனுப்பப்பட்ட சம்மனை ஏற்றுத்தான் அவர் ஆஜராகி இருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜயபாஸ்கர் மீதான குட்கா வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்தது. அதில் விஜயபாஸ்கர் தொடர்ச்சியாக ஆஜராகி வந்தார். இதன் காரணமாகவே அவர் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகவில்லை என்று கூறப்பட்டது. #MinisterVijayabaskar #JayaDeathProbe
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X