என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சோழவந்தானில் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை
Byமாலை மலர்19 Jan 2019 6:40 AM GMT (Updated: 19 Jan 2019 6:40 AM GMT)
சோழவந்தானில் 9-ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சோழவந்தான்:
மதுரை சோழவந்தான் அருகிலுள்ள சின்ன இரும்பாடியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகள் மகாலட்சுமி (வயது 14). இவர் சின்னாளப்பட்டியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
மகாலட்சுமி பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவர் மிகுந்த சோர்வுடன் இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் மகாலட்சுமி சம்பவத்தன்று அதிகாலை வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மகாலட்சுமி பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக மகாலட்சுமியின் சகோதரர் விஜயகுமார் சோழவந்தான் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அய்யாரு வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்.
மற்றொரு சம்பவம்...
மதுரை திருப்பரங்குன்றம் அருகிலுள்ள தனக்கன்குளம் வெங்கலமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் ஜெயகுமார் (24) லாரி கிளீனராக வேலை பார்த்தார்.
இந்த நிலையில் ஜெயகுமார் நேற்றிரவு குடிபோதையில் வீட்டு மாடிக்கு தூங்க சென்றார். நள்ளிரவில் சிறுநீர் கழிப்பதற்காக ஏணி மூலம் கீழே இறங்கினார்.
அப்போது ஜெயகுமார் துரதிருஷ்டவசமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே ஜெயகுமார் பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக ஜெயகுமாரின் தாய் ஜெயசீலி ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கருத்தபாண்டி வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை சோழவந்தான் அருகிலுள்ள சின்ன இரும்பாடியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகள் மகாலட்சுமி (வயது 14). இவர் சின்னாளப்பட்டியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
மகாலட்சுமி பொங்கல் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். அப்போது அவர் மிகுந்த சோர்வுடன் இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் மகாலட்சுமி சம்பவத்தன்று அதிகாலை வீட்டில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மகாலட்சுமி பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக மகாலட்சுமியின் சகோதரர் விஜயகுமார் சோழவந்தான் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் அய்யாரு வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்.
மற்றொரு சம்பவம்...
மதுரை திருப்பரங்குன்றம் அருகிலுள்ள தனக்கன்குளம் வெங்கலமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் ஜெயகுமார் (24) லாரி கிளீனராக வேலை பார்த்தார்.
இந்த நிலையில் ஜெயகுமார் நேற்றிரவு குடிபோதையில் வீட்டு மாடிக்கு தூங்க சென்றார். நள்ளிரவில் சிறுநீர் கழிப்பதற்காக ஏணி மூலம் கீழே இறங்கினார்.
அப்போது ஜெயகுமார் துரதிருஷ்டவசமாக நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதையடுத்து அவரை உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே ஜெயகுமார் பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக ஜெயகுமாரின் தாய் ஜெயசீலி ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் கருத்தபாண்டி வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X