search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு
    X

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் சந்தையில் காய்கறிகள் விலை உயர்வு

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒட்டன்சத்திரம் சந்தையில் காய்கறிகள் விலை அதிகரித்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நேற்று முதல் பல்வேறு கிராமங்களில் இருந்து அதிக அளவு காய்கறிகள் கொண்டு வரப்பட்டன.

    வரும் 16-ந் தேதி மாட்டு பொங்கலை முன்னிட்டு அன்று சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றைய தினம் விவசாயிகள் யாரும் காய்கறிகளை கொண்டு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வரத்து அதிகரித்த போதிலும் காய்கறிகளின் தேவையும் இருப்பதால் விவசாயிகள் எதிர்பார்த்த விலை கிடைத்தது. குறிப்பாக பூசணிக்காய் கடந்த சில நாட்களாகவே போதிய விலை கிடைக்காமல் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    தற்போது உள்ளூர் பயன்பாட்டிற்கே அதிக தேவை இருப்பதால் விலை அதிகரித்தது. இதேபோல தக்காளி ஒரு பெட்டி ரூ.330 வரை விற்பனையானது. கத்தரிக்காய் ஒருபை ரூ.450, வெண்டைக்காய் ஒரு கிலோ ரூ.27, பீன்ஸ், ரூ.250, முருங்கை ரூ.400, நார்த்தை ரூ.60, சுரைக்காய் ரூ.5, பீட்ரூட் ரூ.12 என விற்பனையானது.

    இதேபோல பொங்கல் பண்டிகைக்கென கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, கூலைப்பூ போன்றவையும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், கேரளாவிற்கும் அதிக அளவு காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டன. இதனால் வழக்கத்திற்கு மாறாக இன்று காலை முதலே சந்தை பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×