search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டில் இருந்து பின்வாங்க மாட்டோம் - அமைச்சர் ஜெயக்குமார்
    X

    தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டில் இருந்து பின்வாங்க மாட்டோம் - அமைச்சர் ஜெயக்குமார்

    தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீட்டில் இருந்து பின்வாங்க மாட்டோம் என்று சட்டசபையில் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார். #MinisterJayakumar
    சென்னை:

    சட்டசபையில் இன்று அமைச்சர் டி.ஜெயக்குமார் 10 சதவீத இடஒதுக்கீடு குறுத்து பேசியதாவது:-

    பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு பற்றிய செய்தியை நாங்களும் படித்தோம். அதைப்பற்றிய சட்டம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை.

    1921-ம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் சமுதாய இடஒதுக்கீடு வழங்குவதில் தமிழகம் முன்னிலையில் இருக்கிறது. 50 சதவீத இட ஒதுக்கீடு முன்பு இருந்தது. பின்னர் தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடாக வழங்கப்பட்டது.

    அம்மா முதல்வராக இருந்தபோது டெல்லி சென்று அன்றைய பிரதமர் நரசிம்மராவை சந்தித்து 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை உறுதி செய்தார். அப்போது நான் பிற்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தேன்.

    சமூகநீதி காத்த புரட்சித் தலைவியின் நடவடிக்கையை அனைத்து கட்சிகளும் பாராட்டின. திராவிட கழக தலைவர் கி.வீரமணி, சமூகநீதி காத்த வீராங்கனை என்று பாராட்டினார்.

    புரட்சித்தலைவி அமல்படுத்திய 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பும் வராமல் தமிழக அரசு பாதுகாக்கும். மத்திய அரசின் கொள்கை முடிவு பற்றி அரசு ரீதியான எந்த தகவலும் வரவில்லை. அதை அறிந்த பிறகு எங்கள் கருத்தை தெளிவுபடுத்துவோம்.

    இவ்வாறு அவர் பேசினார். #MinisterJayakumar
    Next Story
    ×