என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
செங்கல்பட்டு கல்லூரியில் மருத்துவ மாணவர் தூக்குபோட்டு தற்கொலை
Byமாலை மலர்7 Jan 2019 7:41 AM GMT (Updated: 7 Jan 2019 7:41 AM GMT)
செங்கல்பட்டு கல்லூரியில் படித்து வந்த புதுவையை சேர்ந்த மருத்துவ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #PuducherryMedicalStudent
செங்கல்பட்டு:
செங்கல்பட்டில் உள்ள பல் மருத்துவ கல்லூரியில் புதுவையை சேர்ந்த தேஸ்வர் அரவிந்தன் என்ற மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்தார். 3-ம் ஆண்டு மாணவர்.
கல்லூரியில் கடந்த 3 நாட்களாக விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களை வரவேற்கும் குழுவில் தேஸ்வர் அரவிந்தன் இடம் பெற்றிருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு தனது அறையில் மாணவர் அரவிந்தன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் படாளம் போலீசார் விரைந்து சென்று மாணவர் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர், தேஸ்வர் அரவிந்தன் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார்.
அதில் வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். மாணவர் மரணம் குறித்து புதுவையில் உள்ள பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் செங்கல்பட்டுக்கு விரைந்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிந்ததும் தேஸ்வர் அரவிந்தனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. #PuducherryMedicalStudent
செங்கல்பட்டில் உள்ள பல் மருத்துவ கல்லூரியில் புதுவையை சேர்ந்த தேஸ்வர் அரவிந்தன் என்ற மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்தார். 3-ம் ஆண்டு மாணவர்.
கல்லூரியில் கடந்த 3 நாட்களாக விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களை வரவேற்கும் குழுவில் தேஸ்வர் அரவிந்தன் இடம் பெற்றிருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு தனது அறையில் மாணவர் அரவிந்தன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் கிடைத்ததும் படாளம் போலீசார் விரைந்து சென்று மாணவர் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர், தேஸ்வர் அரவிந்தன் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்தார்.
அதில் வாழ்க்கையில் நிம்மதி இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். அந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றி உள்ளனர். மாணவர் மரணம் குறித்து புதுவையில் உள்ள பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் செங்கல்பட்டுக்கு விரைந்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிந்ததும் தேஸ்வர் அரவிந்தனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. #PuducherryMedicalStudent
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X