search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவாரூர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார் - அதிமுக தலைமை
    X

    திருவாரூர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஓரிரு நாளில் அறிவிக்கப்படுவார் - அதிமுக தலைமை

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுவார் என அ.தி.மு.க. தலைமை தெரிவித்துள்ளது. #ThiruvarurByElection #ADMK
    சென்னை:

    திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் வருகிற 28-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. மனு தாக்கலுக்கு 10-ம் தேதி கடைசி நாளாகும்.

    திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். தி.மு.க. சார்பில் பூண்டி கலைவாணன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் காமராஜ் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து டி.டி.வி.தினகரன் வருகிற 17-ம் தேதி முதல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார்.

    இதற்கிடையே, அ.தி.மு.க. சார்பில் திருவாரூர் தொகுதியில் யார் நிறுத்தப்படுவார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் வேட்பாளரை தேர்வு செய்யும் அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு கூட்டம் நேற்று ஒத்தி வைக்கப்பட்டது.

    அ.தி.மு.க. சார்பில் போட்டியிட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அசோகன், பாபா சுப்பிரமணியன் உள்ளிட்ட 52 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை அ.தி.மு.க. ஆட்சிமன்ற குழு கூடியது. கூட்டம் முடிந்த பின்னர் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 
    அப்போது அவர்கள் கூறுகையில், திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்படுவார். வேட்பாளரை அறிவிக்கவில்லை என்றால் தேர்தலை கண்டு அச்சப்படுகிறோம் என்று அர்த்தமா? எத்தனை தேர்தல் வந்தாலும் அவற்றை சந்திக்க அதிமுக அச்சப்படாது என தெரிவித்தனர். #ThiruvarurByElection #ADMK
    Next Story
    ×