என் மலர்
செய்திகள்

நிலக்கோட்டையில் பிளாஸ்டிக் ஆய்வுக்கு சென்ற அதிகாரியுடன் மோதல்
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை பூ மார்க்கெட்டிற்கு தினந்தோறும் ஏராளமான விவசாயிகள் பூக்களை விற்பனைக்காக கொண்டு வருகின்றனர். இதனை வாங்குவதற்கு உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் வருகின்றனர்.
இவர்களுக்கு பூக்கள் பிளாஸ்டிக் பைகளிலேயே வழங்கப்பட்டு வந்தது. நேற்று முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். அதன்படி நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் கோட்டைச்சாமி தலைமையில் இன்று அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றனர்.
பிளாஸ்டிக் பைகளில் பூக்களை வாங்கிச்சென்ற வியாபாரிகளிடம் அதனை பறிமுதல் செய்தனர். இதனால் ஆவேசமடைந்த வியாபாரிகள் எங்கு பிளாஸ்டிக் தயாரிக்கப்படுகிறதோ அங்கு பறிமுதல் செய்யாமல் எங்களை ஏன் தடுக்கிறீர்கள் என அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பூமார்க்கெட்டில் இருந்த பல கடைகளிலும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தியதை பார்த்து அதனை பறிமுதல் செய்தனர். இதனால் வியாபாரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. அதன்பின்னர் இன்று ஒருநாள் அவகாசம் கொடுப்பதாகவும், நாளைமுதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுவத்துவது தெரியவந்தால் அதனை பறிமுதல் செய்வதோடு அபராதமும் விதிக்கப்படும் என எச்சரித்து சென்றனர்.
இந்த சம்பவத்தனால் பூ மார்க்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டது.






