என் மலர்
செய்திகள்

பொள்ளாச்சி அருகே வீட்டின் கதவை உடைத்து 19 பவுன் தங்க நகை திருட்டு
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வீட்டின் கதவை உடைத்து 19 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
கோவை:
பொள்ளாச்சி அருகே உள்ள மகாலிங்கபுரம் நேரு வீதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 60). கடந்த 28-ந்தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு சென்றார்.
அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், வளையல் உள்ளிட்ட 19 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர்.
வீட்டுக்கு திரும்பிய ரமேஷ்குமார் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு நகைகள் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்தார்.
உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 19 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
பொள்ளாச்சி அருகே உள்ள மகாலிங்கபுரம் நேரு வீதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 60). கடந்த 28-ந்தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு சென்றார்.
அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், வளையல் உள்ளிட்ட 19 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர்.
வீட்டுக்கு திரும்பிய ரமேஷ்குமார் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு நகைகள் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்தார்.
உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 19 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
Next Story






