என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொள்ளாச்சி அருகே வீட்டின் கதவை உடைத்து 19 பவுன் தங்க நகை திருட்டு
Byமாலை மலர்2 Jan 2019 10:24 AM GMT (Updated: 2 Jan 2019 10:24 AM GMT)
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே வீட்டின் கதவை உடைத்து 19 பவுன் தங்க நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
கோவை:
பொள்ளாச்சி அருகே உள்ள மகாலிங்கபுரம் நேரு வீதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 60). கடந்த 28-ந்தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு சென்றார்.
அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், வளையல் உள்ளிட்ட 19 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர்.
வீட்டுக்கு திரும்பிய ரமேஷ்குமார் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு நகைகள் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்தார்.
உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 19 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
பொள்ளாச்சி அருகே உள்ள மகாலிங்கபுரம் நேரு வீதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 60). கடந்த 28-ந்தேதி இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கேரள மாநிலம் திருவனந்தபுரத்துக்கு சென்றார்.
அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த செயின், வளையல் உள்ளிட்ட 19 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்றனர்.
வீட்டுக்கு திரும்பிய ரமேஷ்குமார் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு நகைகள் திருட்டு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இது குறித்து மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்தார்.
உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த மர்மநபர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதனை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 19 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X