search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அம்பத்தூரில் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
    X

    அம்பத்தூரில் ஏடிஎம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

    அம்பத்தூரில் ஏ.டி.எம்.எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அம்பத்தூர்:

    அம்பத்தூர், சி.டி.எச். சாலையில் உள்ள தொலைப்பேசி இணைப்பகம் அருகே இன்று அதிகாலை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள ‘சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியா’ வங்கியின் ஏ.டி.எம். மையத்தில் உள்ள வருகை புத்தகத்தில் கையெழுத்திட ரோந்து போலீசார் சென்றனர்.

    அப்போது ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்து இருந்தது. மேலும் கண்காணிப்பு கேமிராவும் திருப்பி வைக்கப்பட்டு இருந்தது. ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால் மர்ம கும்பல் தங்களது திட்டத்தை கைவிட்டு தப்பி சென்று இருப்பது தெரிந்தது. இதனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்த பல லட்சம் ரூபாய் தப்பியது.

    இதுகுறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சியை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
    Next Story
    ×