என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் அருகே டிரைவர் வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை
Byமாலை மலர்1 Jan 2019 10:03 AM GMT (Updated: 1 Jan 2019 10:03 AM GMT)
திண்டுக்கல் அருகே டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
எரியோடு:
திண்டுக்கல் அருகே எரியோடு போலீஸ் சரகம் ஆர்.கோம்பை கரையானூரை சேர்ந்தவர் சின்னச்சாமி. மினிபஸ் டிரைவராக உள்ளார். இவர் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் இருந்த அவரது மனைவி ஜீவா 100 நாள் வேலை திட்டத்திற்கு சென்றுவிட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
மாலை நேரம் வேலை முடிந்து ஜீவா வீட்டுக்கு வந்தார். அப்போது வீடு திறந்துகிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 25 பவுன் நகை, ரூ.43 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளைபோனது கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்து எரியோடு போலீசில் ஜீவா புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
திண்டுக்கல் அருகே எரியோடு போலீஸ் சரகம் ஆர்.கோம்பை கரையானூரை சேர்ந்தவர் சின்னச்சாமி. மினிபஸ் டிரைவராக உள்ளார். இவர் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். வீட்டில் இருந்த அவரது மனைவி ஜீவா 100 நாள் வேலை திட்டத்திற்கு சென்றுவிட்டார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
மாலை நேரம் வேலை முடிந்து ஜீவா வீட்டுக்கு வந்தார். அப்போது வீடு திறந்துகிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 25 பவுன் நகை, ரூ.43 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை கொள்ளைபோனது கண்டு திடுக்கிட்டார். இதுகுறித்து எரியோடு போலீசில் ஜீவா புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X