search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் அடிபட்டு பெயிண்டர் பலி
    X

    ஜோலார்பேட்டை அருகே ரெயிலில் அடிபட்டு பெயிண்டர் பலி

    ஜோலார்பேட்டை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற பெயிண்டர் மீது ரெயில் மோதியது. இதில் அடிபட்ட அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    ஜோலார்பேட்டை:

    வாணியம்பாடி செட்டியப்பனூர் அருகே உள்ள ஜனதாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரேசன் (வயது 46). பெயிண்டர். இவரது மனைவி கவிதா இவர்களுக்கு 3 மகள் 1 மகன் உள்ளனர்.

    சுந்தரேசன் நேற்றிரவு கோதண்டபட்டி ரெயில் தண்டவாளத்தை கடந்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தார்.

    ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.          
    Next Story
    ×