என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

காங்கேயம் பகுதியில் தொடர்வழி பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் காங்கயம் படியூர் பகுதியை சேர்ந்தவர் பூங்கொடி. இவர் 2 மாதங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் சென்றபோது மர்ம நபர்கள் 2 பேர் அவர் அணிந்திருந்த நகையை பறித்து சென்றனர்.
அதேபோல் விஜயகுமார் என்பவரிடம் வழிப்பறி செய்து தப்பினர். இதுதொடர்பாக காங்கயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் சந்தேகப்படும்படியாக இருந்த 2 பேரை கைது செய்தார். அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் கார்த்திக் மற்றும் மன்னன் கார்த்திக் என்பது தெரியவந்தது. மேலும் நகை பறிப்பு மற்றும் பணம் பறித்ததை ஒப்புக்கொண்டனர் .இதையடுத்து 2 பேரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இவர்கள் மீது ஏற்கனவே சேலம், தர்மபுரி மாவட்டங்களில் பல வழிப்பறி, கொள்ளை வழக்குகள் உள்ளதால் இவர்களை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையின் பேரில் மாவட்ட கலெக்டர் பழனிசாமி இரண்டு 2 வாலிபர்களையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
