search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் 4 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை
    X

    கோவையில் 4 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளை

    கோவையில் 4 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை நஞ்சப்பா ரோட்டில் உள்ள 4 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டிருந்து. அதிர்ச்சியடைந்த கடை உரிமையாளர்கள் இன்று காலை உள்ளே சென்று பார்த்தபோது 3 கடைகளில் இருந்த ரூ.20 ஆயிரம் கொள்ளை போயிருந்தது. மற்றொரு கடையில் பூட்டு மட்டும் உடைக்கப்பட்டிருந்தது.

    இது குறித்து கடை உரிமையாளர்கள் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் தடயங்களை சேகரித்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த பகுதியில் உள்ள பிளாஸ்டிக் எந்திரம் தயாரிக்கும் கம்பெனி, பேரிங் இரும்பு கம்பெனி உள்ளிட்ட 4 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் உள்ள மற்ற கடை உரிமையாளர்களையும் பீதியடைய செய்துள்ளது.

    Next Story
    ×