என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நந்தனத்தில் மிளகாய் பொடி தூவி ரூ.4 லட்சம் கொள்ளை
சென்னை:
சென்னை திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவர் ஜாபர் சாதிக். இவர் தனது நண்பர் தமீம் அன்சாரியை நேற்று இரவு 10.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்றார்.
நந்தனம் தேவர் சிலை அருகில் இருவரும் சென்று கொண்டிருந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து முகத்தில் மிளகாய் பொடி தூவியது.
பின்னர் அவர்கள் வைத்திருந்த பணப் பையையும் வழிப்பறி கும்பல் பறித்தது. ஆனால் ஜாபர் சாதிக்கும், தமீம் அன்சாரியும் அவர்களோடு போராடினார்கள். இதையடுத்து ஹெல் மெட்டால் இருவரையும் தாக்கிய கொள்ளையர்கள் ரூ.4 லட்சம் பணத்தை பறித்து சென்றனர்.
இதுபற்றி தேனாம்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
கொள்ளை நடந்த இடத்தில் உள்ள கண் காணிப்பு கேமராக்களையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ரூ.4 லட்சம் பணத்துக்கு போலீசார் கணக்கும் கேட்டு உள்ளனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த நேரத்தில் நடைபெற்ற துணிகர கொள்ளை சம்பவம் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்