என் மலர்

    செய்திகள்

    மது போதையில் தகராறு- பெண் தீக்குளித்து தற்கொலை
    X

    மது போதையில் தகராறு- பெண் தீக்குளித்து தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    லாலாப்பேட்டையில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். காப்பாற்ற சென்ற கணவரும் கருகினார்.
    லாலாப்பேட்டை:

    லாலாப்பேட்டை  அருகே உள்ள கொம்பாடிபட்டியை சேர்ந்தவர் அருள்சக்தி. இவரது மனைவி மைதிலி (வயது 37). இவர்களுக்கு 3  குழந்தைகள் உள்ளனர். அருள்சக்தி தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவி மைதிலியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. 

    இந்நிலையில் நேற்று இரவும் அருள்சக்தி மது குடித்து விட்டு போதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது கணவர் -மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த மைதிலி வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக்திவேல் மைதிலியை காப்பாற்றி முயன்றார். அப்போது அவர் மீதும் தீ பரவியது. இதனால் தீயின் வெப்பம் தாங்காமல் அலறினர்.

    இருவரதும் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று  2 பேரையும் மீட்டு  சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மைதிலி பரிதாபமாக இறந்தார். சக்திவேல் தீவிர சிகிச்சை பெற்று  வருகிறார். இது குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    Next Story
    ×