search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    32 வயது பெண்ணை கடத்திய 20 வயது வாலிபர்- போலீசில் பரபரப்பு புகார்
    X

    32 வயது பெண்ணை கடத்திய 20 வயது வாலிபர்- போலீசில் பரபரப்பு புகார்

    ஏரியூர் அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில் அம்மா வீட்டிற்கு சென்ற 32 வயது பெண்ணை 20 வயது வாலிபர் கடத்தி சென்றார். இது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், ஏரியூர் அடுத்துள்ள அஜ்ஜன அள்ளி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மனைவி காந்தாமணி (வயது32). இவர்களுக்கு 5 வயது குழந்தை உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சனை ஏற்பட்டது. இதனால் கோபித்து கொண்டு காந்தாமணி அவரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். கடந்த 17-ந் தேதி காந்தாமணி வீட்டில் இருந்து தாயிடம் வெளியில் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் ஐய்யண்ணன் உறவினர் வீடு உள்பட பல இடங்களில் தேடினார். ஆனால் எங்கும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இது குறித்து ஐய்யண்ணன் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் பூவரசன் (வயது20) என்பவர் எனது மகளை கடத்தி சென்றிருக்கலாம் என்று ஏரியூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×