என் மலர்
செய்திகள்

அரூர் அருகே மாணவி கடத்தல்: போக்சோ சட்டத்தில் 3 பேர் கைது
9-ம் வகுப்பு மாணவியை கடத்திச் சென்ற வாலிபர் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார், போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
அரூர்:
தர்மபுரி மாவட்டம், அரூரை அடுத்த மாம்பாடியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவியை, அதே பகுதியைச் சேர்ந்த சிவசக்தி (வயது 23), என்பவர் கடந்த 17ந் தேதி, கடத்திச் சென்றதாக அவரது தாய் அரூர் போலீசில் புகார் அளித்தார்.
இது குறித்து, போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், மாணவியை கடத்திச் சென்ற சிவசக்தியை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். மேலும், இவருக்கு, அடைக்கலம் அளித்ததாக, திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த பாளையம்காட்டு பள்ளத்தை சேர்ந்த சிவா (41), ரமேஷ் (25), ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story