search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கம்ப்யூட்டர் தகவல் கண்காணிக்கும் உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்- நாராயணசாமி
    X

    கம்ப்யூட்டர் தகவல் கண்காணிக்கும் உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்- நாராயணசாமி

    அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களை கண்காணிக்கும் உத்தரவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். #PondicherryCM #Narayanasamy #CentralGovt
    புதுச்சேரி:

    அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களையும் கண்காணிக்க சி.பி.ஐ. உள்ளிட்ட 10 அமைப்புகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

    இது, தனி மனிதரின் சுதந்திரத்தை பறிக்கும் செயல் என கூறி எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பாக புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-


    கம்ப்யூட்டர் தகவல்களை கண்காணிக்கும் மத்திய அரசின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும். கம்ப்யூட்டரை கண்காணிப்பது தனி மனித சுதந்திரத்தில் தலையிடுவதாகும். எனவே, மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் குரல் கொடுக்க வேண்டும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறி உள்ளார். #PondicherryCM #Narayanasamy #CentralGovt
    Next Story
    ×