search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கீரமங்கலத்தில் 24-ந்தேதி கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
    X

    கீரமங்கலத்தில் 24-ந்தேதி கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

    கீரமங்கலத்தில் 24-ந்தேதி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
    புதுக்கோட்டை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம், கறம்பக்குடி, அறந்தாங்கி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான கூட்டம் கீரமங்கலத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ராஜசேகரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கவிவர்மன், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

    கூட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். குறிப்பாக தென்னை மரத்துக்கு ரூ.20 ஆயிரம், வாழை ஏக்கருக்கு ரூ.1 லட்சம் மற்றும் மா, பலா மரங்களுக்கு தலா ரூ.5 ஆயிரம், நெல் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் என இழப்பீடாக வழங்க வேண்டும். வீடுகளை இழந்துள்ள மக்களுக்கு அரசே வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். 

    கல்விக்கடன், விவசாய கடன், மைக்ரோ பைனான்ஸ் கடன் உள்ளிட்டவற்றை ரத்து செய்ய வேண்டும். மேலும் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியூர்களில் படிக்கும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும். ஆழ்குழாய் கிணறுகளில் மீட்டர் கட்டணத்தை ரத்து செய்து இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 24-ந் தேதி கீரமங்கலத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் பிரமாண்டமான ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும்,  ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொள்வார் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
    Next Story
    ×