search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பரங்குன்றத்தில் கோவிலுக்கு வந்த பெண்ணிடம் 6 பவுன் தாலி செயின் பறிப்பு
    X

    திருப்பரங்குன்றத்தில் கோவிலுக்கு வந்த பெண்ணிடம் 6 பவுன் தாலி செயின் பறிப்பு

    கோவிலுக்கு வந்த பெண்ணிடம் 6 பவுன் தாலிசெயினை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் சப்பாணி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபாண்டி, தேங்காய் வியாபாரி. இவரது மனைவி ஹேமலதா (வயது 40).

    சம்பவத்தன்று இவர் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். சாமி கும்பிட்ட பின் ஹேமலதா 16 கால் மண்டபம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன் படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் ஹேமலதா கழுத்தில் கிடந்த 6 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.

    இது குறித்த புகாரின் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×