search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேகதாது பிரச்சினை தமிழகத்தை பாதித்தால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் - ரஜினிகாந்த்
    X

    மேகதாது பிரச்சினை தமிழகத்தை பாதித்தால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் - ரஜினிகாந்த்

    மேகதாது பிரச்சினை தமிழகத்தை பாதித்தால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் கூறினார். #Mekadatudam #Rajinikanth
    சென்னை:

    ரஜினிகாந்த் இன்று போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:- மேகதாது அணை திட்ட அறிக்கைக்கு தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. இதில் மத்திய அரசு தமிழகத்துக்கு எதிராக செயல்படுவதாக நினைக்கிறீர்களா?



    பதில்:- மேகதாது அணை கட்டுவதால் தமிழகத்துக்கு வரும் தண்ணீருக்கு எந்த பாதிப்பும் வராது என்று மத்திய அரசு கூறியுள்ளது. அது எந்த அளவுக்கு உண்மை என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

    அப்படி பாதிப்பு இருந்தால் கண்டிப்பாக அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சட்டபூர்வமான நடவடிக்கை எடுப்பது தான் இதற்கு ஒரே வழி.

    கேள்வி:- ரிசர்வ் வங்கி கவர்னர் உள்ளிட்ட பலர் அடுத்தடுத்து ராஜினாமா செய்துள்ளனர். இதனால் பங்கு சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளதே?

    பதில்:- ரிசர்வ் வங்கி கவர்னர் ஏன் ராஜினாமா செய்துள்ளார் என்ற உண்மையை தெரியாமல் என்னால் பேச முடியாது.

    கேள்வி:- நீங்கள் அரசியலுக்கு வருவதாக சொல்லி ஒரு வருடம் ஆகப் போகிறது. இப்போது அரசியல் சூழ்நிலை எப்படி இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

    பதில்:- அதை நிறைய முறை சொல்லி விட்டேன்.

    கேள்வி:- உங்களின் அடுத்த பட அறிவிப்பு எப்போது வரும்?

    பதில்:- “பேட்ட” படம் வெளி வந்ததும் அடுத்த படம் பற்றி பார்க்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Mekadatudam #Rajinikanth

    Next Story
    ×