என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆண்டிப்பட்டி அருகே போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த டிரைவர் கைது
Byமாலை மலர்11 Dec 2018 11:01 AM GMT (Updated: 11 Dec 2018 11:01 AM GMT)
ஆண்டிப்பட்டி அருகே போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.
ஆண்டிப்பட்டி:
கண்டமனூர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் மணிமாறன். இவர் சம்பவத்தன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது மின்னல் வேகத்தில் வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த லாரி டிரைவர் மணிமாறனை தகாத வார்த்தைகளால் திட்டி லாரியை ஏற்றி கொலை செய்து விடுவதாக மிரட்டினார்.
இதனையடுத்து போலீசார் அவரை கண்டமனூர் போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர். இதில் அவர் அல்லிநகரம் பாண்டிக்கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (49) என்பது தெரிய வந்தது.
குடிபோதையில் அதிக வேகத்தில் லாரியை ஓட்டியதும், போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். லாரியையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X