என் மலர்
செய்திகள்

வாகன சோதனையின் போது போலீசாருக்கு கொலை மிரட்டல்- 3 பேர் கைது
வளசரவாக்கம் சுரேஷ் நகர் பகுதியில் வாகன சோதனையில் போது போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
போரூர்:
வளசரவாக்கம் சுரேஷ் நகர் பகுதியில் தலைமை காவலர் திலகர்பாபு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த சின்ன போரூர் பகுதியைச் சேர்ந்த பீட்டரை நிறுத்தி விசாரித்தனர். குடிபோதையில் இருந்த பீட்டர் போலீசாரிடம் தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனது நண்பர்களான ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், தேவராஜ் ஆகியேரை அங்கு வரவழைத்தார். அவர்கள் மூன்று பேரும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து பீட்டர், பிரபாகரன், தேவராஜ் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். #tamilnews
வளசரவாக்கம் சுரேஷ் நகர் பகுதியில் தலைமை காவலர் திலகர்பாபு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த சின்ன போரூர் பகுதியைச் சேர்ந்த பீட்டரை நிறுத்தி விசாரித்தனர். குடிபோதையில் இருந்த பீட்டர் போலீசாரிடம் தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மேலும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனது நண்பர்களான ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், தேவராஜ் ஆகியேரை அங்கு வரவழைத்தார். அவர்கள் மூன்று பேரும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து பீட்டர், பிரபாகரன், தேவராஜ் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். #tamilnews
Next Story






