என் மலர்

    செய்திகள்

    திசையன்விளையில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
    X

    திசையன்விளையில் குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    திசையன்விளையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    திசையன்விளை:

    திசையன்விளை அருகே உள்ள உறுமன் குளத்தை சேர்ந்தவர் சின்னதுரை (வயது43). இவர் மீது திசையன்விளை போலீஸ் நிலையத்தில் மணல் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கடந்த மாதம் இவர் மணல் கடத்தியபோது போலீசாரிடம் பிடிபட்டார். அவருக்கு மணல் கடத்தலில் உடந்தையாக இருந்ததாக திசையன்விளை போலீஸ்காரர் சிவாவையும் போலீசார் கைது செய்தனர்.

    இதனிடையே சின்னதுரையை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்தி குமார் மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீசுக்கு சிபாரிசு செய்தார். அதை ஏற்ற அவர் சின்னதுரையை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தர‌விட்டார். அதன்பேரில் சின்னதுரை பாளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×