என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூரில் ஆசிரியையிடம் நகை பறிப்பு
Byமாலை மலர்8 Dec 2018 9:56 AM GMT (Updated: 8 Dec 2018 9:56 AM GMT)
திருவள்ளூரில் ஆசிரியையிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் சிவி நாயுடு சாலை சேர்ந்தவர் மார்ட்டின். இவரது மனைவி ஜான்சிராணி (47) ஆசிரியர்.
இவர் அரக்கோணத்தில் இருந்து வரும் அம்மாவை அழைத்து செல்ல சென்னை சில்க்ஸ் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் ஜான்சிராணி கழுத்தில் இருந்த 5 சவரன் நகையை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மற்றொரு சம்பவம்...
திருவள்ளூரை அடுத்த புடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி தனலட்சுமி (52). இன்று காலை வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் தனலட்சுமி கழுத்திலிருந்த 4 பவுன் தங்க செயினை பறித்தனர்.
இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் பகுதியில் அடிக்கடி வழிப்பறி நடைபெறுவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
திருவள்ளூர் சிவி நாயுடு சாலை சேர்ந்தவர் மார்ட்டின். இவரது மனைவி ஜான்சிராணி (47) ஆசிரியர்.
இவர் அரக்கோணத்தில் இருந்து வரும் அம்மாவை அழைத்து செல்ல சென்னை சில்க்ஸ் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர்கள் ஜான்சிராணி கழுத்தில் இருந்த 5 சவரன் நகையை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப்பகலில் நடந்த இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மற்றொரு சம்பவம்...
திருவள்ளூரை அடுத்த புடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி தனலட்சுமி (52). இன்று காலை வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் தனலட்சுமி கழுத்திலிருந்த 4 பவுன் தங்க செயினை பறித்தனர்.
இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் பகுதியில் அடிக்கடி வழிப்பறி நடைபெறுவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X