search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாடு திருடிய கும்பலுக்கு பொதுமக்கள் தர்மஅடி- 3 பேர் கைது
    X

    மாடு திருடிய கும்பலுக்கு பொதுமக்கள் தர்மஅடி- 3 பேர் கைது

    பெரிபாளையம் அருகே லாரியில் வந்து மாடுகளை திருடிய கும்பலை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
    பெரியபாளையம்:

    பெரியபாளையம் அருகே உள்ள ஆரணியை அடுத்த புதுப்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி.

    நேற்று நள்ளிரவு அவர் வீட்டின் வெளியே மர்ம நபர்கள் சத்தம் கேட்டு வெளியே வந்தார். அப்போது வீட்டின் வெளியே கட்டப்பட்டு இருந்த 2 மாடுகளை 3 வாலிபர்கள் திருடி செல்வதை கண்டு கூச்சலிட்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் மாடு திருடிச் சென்ற கும்பலை சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவர்களை ஆரணி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் அவர்கள் சோழவரம் அருகே உள்ள கிருதலாபுரம் பகுதியை சேர்ந்த மினிலாரி டிரைவர் ராஜேஷ், மற்றும் 14 வயதுடைய 2 சிறுவர்கள் என்பது தெரிந்தது.

    திருப்பதிக்கு நடைபயணம் செல்லும் பக்தர்களுக்கு உணவு எடுத்து செல்லுவது போல் மினிவேனை தயார் செய்து ஊர் எல்லையில் நிறுத்திவிட்டு மாட்டை திருடிச்செல்ல திட்டமிட்டதை ஒப்புக்கொண்டனர். அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து மினி லாரியை பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×