search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேலூர் அருகே வீடு புகுந்து நகை-பணம் கொள்ளை
    X

    மேலூர் அருகே வீடு புகுந்து நகை-பணம் கொள்ளை

    மேலூர் அருகே வீடு புகுந்து நகை- பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மேலூர்:

    மேலூர் அருகே உள்ள வெள்ளலூரைச் சேர்ந்தவர் கணேசன். (வயது 38). வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    ஜெயந்தி தனது குழந்தைகளுடன் புலிமலைப்பட்டி கோவில் திருவிழாவுக்கு சென்று விட்டார்.

    இதை அறிந்த மர்ம மனிதர்கள் ஜெயந்தி வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பீரோவை திறந்தனர். அதிலிருந்த 5 பவுன் நகை மற்றும் ரொக்கம் ரூ. 5 ஆயிரம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.

    இன்று காலை வீடு திரும்பிய ஜெயந்தி வீட்டில் நகை-பணம் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கொள்ளை குறித்து கீழவளவு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சங்கீதா, ஏட்டு பரசுராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×