என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழக ஆளுநர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்- வைகோ
Byமாலை மலர்2 Dec 2018 6:46 AM GMT (Updated: 2 Dec 2018 6:46 AM GMT)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார். #Vaiko #BanwarilalPurohit
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு பரிந்துரை செய்தது. ஆனால் இதுகுறித்து ஆளுநர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் அவர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஸ் எரிப்பு வழக்கில் மூன்று அப்பாவி மாணவிகள் சாவுக்கு காரணமான கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யும் ஆளுநர் எந்த தவறு செய்யாத 7 அப்பாவிகளை விடுதலை செய்ய மறுப்பது ஏன் ? இதனை கண்டித்து நாளை நடைபெறும் போராட்டத்திற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்பட அனைவரும் முழு ஒத்துழைப்பு தருகின்றனர்.
இதில் நாங்கள் அனுமதி கேட்ட இடம் வரை செல்ல போலீசார் அனுமதி மறுத்தால் ஜல்லிக்கட்டு போல் மிகப்பெரிய போராட்டமாக மாறும்.
இவ்வாறு வைகோ கூறினார். #Vaiko #BanwarilalPurohit
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடி நாட்டிற்கு சாபகேடு, தமிழகத்திற்கு ஆளுநர் சாபகேடு. தமிழகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருக்கும் போது ஆளுநர் அத்துமீறி செயல்படுகிறார். மாவட்டம் தோறும் கலெக்டர்களை அழைத்து கொண்டு புரோக்கர் போல் செயல்படுகிறார்.
பஸ் எரிப்பு வழக்கில் மூன்று அப்பாவி மாணவிகள் சாவுக்கு காரணமான கொலை குற்றவாளிகளை விடுதலை செய்யும் ஆளுநர் எந்த தவறு செய்யாத 7 அப்பாவிகளை விடுதலை செய்ய மறுப்பது ஏன் ? இதனை கண்டித்து நாளை நடைபெறும் போராட்டத்திற்கு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் உள்பட அனைவரும் முழு ஒத்துழைப்பு தருகின்றனர்.
இதில் நாங்கள் அனுமதி கேட்ட இடம் வரை செல்ல போலீசார் அனுமதி மறுத்தால் ஜல்லிக்கட்டு போல் மிகப்பெரிய போராட்டமாக மாறும்.
இவ்வாறு வைகோ கூறினார். #Vaiko #BanwarilalPurohit
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X