என் மலர்

    செய்திகள்

    பழனியில் காதல் தகராறு- ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து
    X

    பழனியில் காதல் தகராறு- ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    பழனியில் காதல் தகராறில் ஆட்டோ டிரைவருக்கு கத்தி குத்து விழுந்தது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பழனி:

    பழனி அடிவாரம் வாய்க்கால் மேடு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி மகன் மணிகண்டன் (வயது28). ஆட்டோ டிரைவர். இவர் அண்ணாநகரை சேர்ந்த ராமன் என்பவர் மகளை காதலித்துள்ளார்.

    இது தொடர்பாக அந்த பெண்ணின் அண்ணனுக்கும் மணிகண்டனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    சம்பவத்தன்று இது தொடர்பாக மணிகண்டனுக்கும், பெண்ணின் அண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பெண்ணின் சகோதரர் மணிகண்டனை கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த மணிகண்டன் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பாக பழனி அடிவாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×